முன்னாள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர மரணம்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரசிறி கஜதீர நேற்று மாலை காலமானார்.

உடல்நலக் குறைவினால் கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமானார் என குடும்ப வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 73 வயதான, சந்திரசிறி கஜதீர 1994ஆம் ஆண்டு முதல் முறையாக மாத்தறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அதன் பின்னர், சந்திரிகா அரசாங்கத்தில் 2000ஆம் ஆண்டு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!