18 வேட்பாளர்கள்- 16 மில்லியன் வாக்காளர்கள்!

இந்த ஜனாதிபதித் தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தியுள்ளனர் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,

“ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் டிசம்பர் 9 ஆம் திகதிக்குள் நடத்த முடியும் என கூறினார். ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவுள்ளது.

பிரதான அரசியல் கட்சிகளை சேர்ந்த 17 பேர் தேர்தலில் போட்டியிடவுள்ளமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தடவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுயாதீனமாக போட்டியிடவுள்ளமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் தேர்தலில் சுயாதீனமாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தத் தடவை ஜனாதிபதித் தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலின்போது 2018 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் கருத்திற்கொள்ளப்படும். அதற்கமைய, 159,92,096 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!