பருத்தித்துறையில் பற்றியெரிந்த வாகனங்கள்!

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை பகுதியில் நேற்று மாலை 6.45 மணி அளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீ பற்றி எரிந்ததுடன் அருகில் நின்ற ஹயஸ் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டியும் வீட்டின் ஒரு பகுதியும் எரிந்து சேதமடைந்தன.

பருத்தித்துறை, பரியாரியார் வீதியில் உள்ள வீடு ஒன்றில் பேருந்து,ஹயஸ்,முச்சக்கர வண்டி ஆகியன நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் வாகனங்கள் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!