தமிழ் மக்களின் அரசியல் தீர்வில் இந்தியாவின் தலையீடே முக்கியம் – அடித்துக்கூறுகிறார் சுமந்திரன்

தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகள் கிடைத்தாலும் இந்தியாவின் பங்களிப்பு இதில் மாறுபட்ட ஒன்றாகும் எனத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன், தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வு கிடைக்கவேண்டும் என்பதில் இந்தியாவே ஆரோக்கியமான சிந்திக்கின்றது என்றும் கூறினார்.

அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகள், அதில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!