மொட்டுடன் இணைய முயற்சிக்கிறார் மைத்திரி!

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது நல்லது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தனகல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கட்சியின் வாக்குகளை கட்சிக்குள்ளேயே நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். கட்சியின் தலைவர் சுயமாக தீர்மானம் எடுக்கவில்லை, மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உடன் இணைவதற்கு நடவடிக்கை எடுக்கிறார். இவ்வாறான செயற்பாடுகள் எனது கொள்கைக்கு ஒத்துவராததால் தான் அவ்வாறான கலந்துரையாடல்களில் கலந்து கொள்வதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!