ஓஎம்பி ஐ மூடக் கோரி தொடர் போராட்டம்!

யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டில் திறக்கப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை அகற்றுமாறு கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், முன்னெடுத்து வரும் கவனயீர்ப்புப் போராட்டம், நேற்று 2ஆவது நாளாகவும் தொடர்ந்தது.

எமது உறவினர்கள் காணாமல் போகவில்லை; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர், வலிந்து காணமல் ஆக்கிகப்படோரே விசாரணை செய்து கண்டுபிடிப்பது என்பது வெறும் அப்பட்டமான பொய்ப் பிரசாரம், எமது பிள்ளைகள் தொடர்பான விசாரணைகளை சர்வதேசமே மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகளை முன்வைத்து, திங்கட்கிழமை இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!