ஐதேக பங்காளிக் கட்சிகள் இன்று மாலை ஆலோசனை

அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை சந்தித்துப் பேசவுள்ளனர்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்தக் கூட்டம் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அதிபர் வேட்பாளர் தொடர்பாகவும், புதிய கூட்டணியை அறிவிப்பது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

இன்று பிற்பகல் அவசர அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர், மாலை 6 மணியளவில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!