வடக்கில் கோத்தாவை வெற்றி பெறவைக்கும் பொறுப்பு குரேயிடம்!

வட மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேற்று ஸ்ரீ லங்கா ஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டார். ​பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பஷில் ராஜபக்‌ஷவிடம் இருந்து அவர் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாவை வெற்றி பெறச் செய்வதற்காக, வட மாகாணத்தில் எல்லா நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பு ரெஜினோல்ட் குரேயிடம் வழங்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!