மத்திய அமைச்சரை துவைத்தெடுத்த மாணவர்கள்..!

கொல்கத்தாவின் ஜாதவ்புர் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்த வந்த பாஜகவின் மத்திய அமைச்சர் வை மாணவர்கள் முற்றுகையிட்டு தாக்கியதால் அங்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அகில பாரதிய விஷ்வ பரிஷத் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாபுல் சுப்ரியோவை மாணவர்கள் கன்னத்தில் அறைந்து, இழுத்துச் சென்று உதைத்தனர். பாபுல் சுப்ரியோவின் பாதுகாவலர்கள் மனித வளையம் அமைத்து அவரை பாதுகாக்க முயன்றனர். பலமணி நேரம் மாணவர்கள் அவரை வெளியேற விடாமல் வழிமறித்தும் நின்றனர்.

இதனைக் கண்ட மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், மிகப்பெரிய காவல்படையை அழைத்து, அவர்களின் உதவியுடன் கூட்டத்தில் சிக்கிய பாபுல் சுப்ரியோவை மீட்டார். பின்னர் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், சட்டவிரோதமாக மாணவர்கள் நடந்துக் கொண்டனர் என்றும், பாபுல் சுப்ரியோவுக்கு நேரிட்ட அவமதிப்பு கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து பாஜகவினர் கண்டனப் பேரணி நடத்தினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!