இராணுவத்தின் பயிற்சியால் வவுனியா மக்கள் பதற்றம்!

வவுனியா -செட்டிகுளம் பகுதியில் நேற்று இராணுவத்தினர் குவிக்கப்பட்டதால், பொதுமக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. நேற்றுக் காலை குறித்த பகுதியில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போர்க்காலத்தை நினைவூட்டுவதுபோல, பெருமளவான துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்தனர்.

எனினும் குறித்த இராணுவ குவிப்பு பயிற்சி நடவடிக்கைக்காகவே மேற்கொள்ளப்பட்டதாக பின்னர் தெரியவந்தது. எனினும் இராணுவ பயிற்சி என்ற பெயரில் அப்பகுதி மக்கள் மீது கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தமது இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாகவும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!