இராணுவத் தளபதியை கைது செய்யக் கோரி போராட்டம்!

இராணுவத் தளபதியின் வடக்குப் பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக சுழற்சி முறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே, நேற்று மாலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் வடக்குக்கான வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், ”ஜநாவே போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவை கைது செய், தமிழர்களின் பாதுகாப்புக்கு ஐ.நா அமைதி காக்கும் படையினை உடனடியாக அனுப்பு” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க கொடிகளையும் கையில் ஏந்தியிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!