வடமாகாண முதல மைச்சர் சி.வி.விக்னே ஸ்வரன் இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். ஆன்மீக சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொண்டு இன்று தமிழகம் செல்லும் அவர் இருவார காலம் அங்கு தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
தமிழகம் செல்லும் முதலமைச்சர் சில சந்திப்புக்களிலும் கலந்துகொள்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக முதலமைச்சர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வடமாகாண சபையின் பதவிக் காலம் முடிவடையவுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எத்தகைய முடிவினை எடுப்பார் என்ற பரபரப்பான நிலைமை ஏற்பட்டிருக்கிறது. முதலமைச்சர் விக்னேஸ்வரனை அடுத்த மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கும் உத்தேசம் இல்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்மீக சுற்றுலாவை மேற்கொண்டு இந்தியா செல்லும் முதலமைச்சர் நாடு திரும்பியவுடன் தனது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப் பினை வெளியிடுவார் என்று தெரிவிக் கப்படுகிறது
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!