சொலிசிஸ்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசாங்க சேவை ஆணைக்குழு தொலைபேசி ஊடாக சட்டமா அதிபருக்கு இதனை அறிவித்துள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் இவ்வாறு பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர், அரச நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதியுடனான தொலைபேசி உரையாடல் ஊடாக, தொழில் தர்மத்தை சீர்குழைத்துள்ளதாக தில்ருக்ஷி டயஸிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!