எந்த நிபந்தனையையும் ஏற்றுக்கொள்ளவில்லை- சஜீத்

ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக நிபந்தனைகள் எதனையும் ஏற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நான் எந்த முன்நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை எனது கொள்கைகளை மாத்திரம் வலியுறுத்தினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியவேளை; ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவது குறித்து மட்டுமே நான் கவனம் செலுத்துகின்றேன் என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச ரணில்விக்கிரமசிங்க பிரதமராகவும் கட்சியின் தலைவராகவும் நீடிப்பார் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார் என அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எனினும் இதனை நிபந்தனையாக விதிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!