தலையணைக்கடியில் வைத்த கைத்தொலைபேசியால் பறிபோன 14 வயது மாணவியின் உயிர்!

கைத்தொலைபேசி வெடித்ததால் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் கசகஸ்தான் நாட்டில் இடம்பெற்றுள்ளது.

தனது வீட்டின் அறையில் பாடல் கேட்டுகொண்டிருந்த 14 வயது மாணவியொருவர் கைத்தொலைபேசியை சார்ச் செய்வதற்காக அதனை சார்ச் போட்டுவிட்டு தலையணைக்கு அடியில் வைத்தபடி நித்திரைக்கு சென்றுள்ளார்.

இதன்போது மின்கலம் சூடேறி வெடித்ததால் மாணவி தலைப்பகுதியில் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.

அதிகாலை அவரை நித்திரைவிட்டு எழும்பாததால் மாணவி நித்திரையில் இருந்த அறைக்குச்சென்ற பெற்றோர் மகள் இறந்து கிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.

சம்பவத்தை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த மாணவி கைத்தொலைபேசியை மின்இணைப்புடன் வைத்து உறங்கியதால் ஏற்பட்ட அதிக மின்ஏற்றம் காரணமாக மின்கலம் சூடேறி வெடித்து சிதறியுள்ளதால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!