‘கோத்தாவைக் கைது செய்ய சூழ்ச்சி’- புலம்பும் பீரிஸ்!

முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத்தின் ஆலோசனைக்கு அமைய கோத்தாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு அரசியல் சூழ்ச்சி இடம்பெறுவது உறுதியாகியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

அலரி மாளிகையில் இருந்து வழங்கப்பட்ட உத்தரவிற்கமையவே கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!