அதிபர் தேர்தலில் போட்டியிட இதுவரை 20 பேர் கட்டுப்பணம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மூன்று பேர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தினர்.

சிறிலங்கா தொழிற்கட்சி சார்பாக ஏஎஸ்பி லியனகேயும், சுயேட்சை வேட்பாளர்களாகப் போட்டியிடுவதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமரவீர வீரவன்னி மற்றும் அசோக வடிகமங்காவ ஆகியோரும் நேற்று கட்டுப்பணத்தை செலுத்தினர்.

இதுவரை 20 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் 10 பேர் அரசியல் கட்சிகளின் சார்பிலும், 10 பேர் சுயேட்சையாகவும் போட்டியிடவுள்ளனர்.

ஐதேக வேட்பாளர் சஜித் பிரேமதாச சார்பில் இன்னமும் கட்டுப்பணம் செலுத்தப்படவில்லை.

வரும் 6ஆம் நாள் மதியம் 12 மணி வரை கட்டுப்பணம் செலுத்த காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!