சஜித் பிரேமதாசவுக்கும் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்காக, இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாசவின் சார்பில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான அஜித் பெரேரா, சுஜீவ சேனசிங்க ஆகியோர் இன்று முற்பகல் தேர்தல்கள் செயலகத்தில் கட்டுப்பணத்தைச் செலுத்தினர்.

தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் சஜித் பிரேமதாச அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இவரையும் சேர்த்து இதுவரை 22 வேட்பாளர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!