கோத்தாவை ஆதரிக்கமாட்டேன்!

தேர்தலில் போட்டியிடாத போதும் தான் பொதுஜன பெரமுனவிற்கு ஒரு ​போதும் ஆதரவு வழங்கப் போவதில்லை என்று ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். சமல் ராஜபக்‌ஷ வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் தானும் வேட்புமனு தாக்கல் செய்யாதிருக்க இறுதி நேரத்தில் முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திரக்கட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகவும் சுதந்திரக் கட்சி கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்குவதால் குறுங்கால இலாபமே கிடைக்கும் .

ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமாக ​போட்டியிட்டு வெற்றிபெற முடியாது என்றும் அதனால் இம்முறை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை .

ராஜபக்ஷவினருக்கு மாத்திரம் போட்டியிட அனுமதி வழங்க முடியாது. தினேஷ் குணவர்தன போன்ற ஒருவரை நிறுத்தியிருந்தால் பிரச்சினை கிடையாது என்றும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!