ஈரான் இன்ஸ்டாகிராம் பிரபலம் சாஹர் தாபர் கைது

ஈரான் நாட்டின் இன்ஸ்டாகிராம் பிரபலம் சாஹர் தாபர் என்பவர் தெய்வ நிந்தனை செய்தாகவும், வன்முறையைத் தூண்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

சாஹரின் இன்ஸ்டாகிராம் பதிவொன்று கடந்தாண்டு வைரலாக சென்றதை அடுத்து சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியானது.

சாஹருக்கு 50 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளதாக கூறப்பட்டாலும், அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் படங்கள் அனைத்தும் அதிகமாக திருத்தம்செய்தே அவர் பகிர்கிறார்.

22 வயதாகும் சாஹர் கடந்தாண்டு பகிர்ந்த ஒரு படம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. ஹொலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜூலி ஜோம்பியாக இருந்தால் எப்படி இருப்பாரோ அது போல அந்தப் படத்தில் காட்சி தருகிறார் எனச் சர்வதேச ஊடகங்கள் விவரித்தன.

குழி விழுந்த கன்னங்கள்கேலிச்சித்திரம் கதாபாத்திரம் போல மூக்கு என அந்தப் படத்தில் காட்சி அளித்திருந்தார். இவ்வாறாகக் காட்சியளிக்க தாம் முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக அப்போது அவர் கூறி இருந்தார்.

இதன் காரணமாக அவர் சர்வதேச கவனம் பெற்றார். இதனை அடுத்து இன்ஸ்டாகிராமில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

பின்னர் அவரே, அந்த படங்கள் அனைத்தும் மென்பொருள் உதவி கொண்டு திருத்தி அமைக்கப்பட்டவை என்று விளக்கமளித்தார்.

தெய்வ நிந்தனை, வன்முறையைத் தூண்டுதல், சட்டத்திற்குப் புறம்பாக சொத்துகளைக் குவித்தல், நாட்டின் ஆடை கட்டுப்பாட்டை மீறுதல், ஊழல் செய்யத் தூண்டுதல் ஆகியவை சாஹர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எழுந்தன. அனால் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!