நாளை மறுநாள் திறப்பு விழா- 27ஆம் திகதி முதல் விமான சேவை!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வின் போது சென்னையிலிருந்து முதலாவது விமானம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வரவுள்ளது. இதில் இந்திய சிவில் விமான சேவை அதிகாரிகளின் குழுவினர் வரவிருப்பதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அதிகாரி தெரிவித்தார்.

பலாலி விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் வழமையான விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்த சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அதிகாரி விமான நிலையத்தின் உத்தியோக பூர்வமாக திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு போக்குவரத்த மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அழைப்பு விடுத்திருப்பதாகவும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!