ஜனாதிபதி தேர்தல் முடிவு 17 ஆம் திகதி வெளியாகாது!

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி நண்பகலுக்கு முன் வெளியிட வாய்ப்புள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தேர்தல் நடைபெற்ற மறுநாள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும். எனினும் இம்முறை ஜனாதிபதி வேட்பாளர்களின் தொகை அதிகரித்தமையினால் தேர்தல் தொடர்பான இறுதி முடிவினை அடுத்த நாள் வெளியிடுவது சிரமமானது .

அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உறுதிப்படுத்தப்படாத தேர்தல் தொடர்பான முடிவுகளை சமூக ஊடகங்கள் வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!