நாட்டை துண்டாடவே சஜித்திற்கு சம்பந்தன் ஆதரவு – வீரகுமார

அதிகாரப்பகிர்வின் ஊடாக நாட்டை பிளவுபடுத்துவதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிப்பதாக சுதந்திர கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாம் நாட்டில் ஒற்றுமையையே எதிர்பார்க்கின்றோம். அதுவே எமது இலக்காகும். கூட்டமைப்பு அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியலமைப்பு மற்றும் அதிகார பகிர்வுக்கான யோசனைகள் ஆகியவற்றிலேயே கவனம் செலுத்தியிருக்கிறது.

தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் ஏதேனுமொரு காரணத்தைக் கூறிக் கொண்டு ஏதாவதொரு தரப்பு ஆதரவளிக்கும். இந்த நிலைமையை மாற்றியமைக்குமாறு வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் அவர் கூறினார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!