குமார வெல்கமவை மொட்டில் இணையக் கோரி சத்தியாக்கிரகம்!

குமார வெல்கமவை பொதுஜன பெரமுனவில் இணையுமாறு கோரி மத்துகம நகரில் தேரர்கள் உள்ளிட்ட சிலர் நேற்று சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மத்துகம நகர மத்தியில் நேற்றுக் காலை கூடியவர்கள் மத வழிபாடுகளின் பின்னர் சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர். தேரர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சந்திப்பதற்கு குமார வெல்கமவின் புதல்வர், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் செனால் வெல்கம வருகை தந்திருந்தார். எனினும், பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வருகை தந்து தமது கோரிக்கைக்கு இணங்கும் வரை சத்தியாகிரகப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அவர்கள் கூறினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!