சொந்த வீடு கூட இல்லாத இளைஞருக்கு அடித்த லக்!!!

சொந்த வீடு கூட இல்லாத இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் தற்போது தீவு ஒன்றிற்கு உரிமையாளராகி உள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த பிரண்டன் லோப்பஸ் என்பவர் தற்போது துபாயில் வசித்து வருகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லோப்பஸ், எமிரேட்ஸ் என்பிடி என்ற நிறுவனம் நடத்திய குறும்படப் போட்டியில் பங்கேற்றதில் அதில் முதல் பரிசாக அவருக்கு ஒரு லட்சம் திர்ஹாம்களும், கனடாவின் நோவா ஸ்கோட்டியா அருகே 6 ஏக்கர் அளவிலான ஹால்பாயிண்ட் தீவு ஒன்றும் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பரிசு குறித்து மகிழ்ச்சி வெளியிட்ட லோப்பஸ், சொந்தமாக வீடுகூட இல்லாத தான், தற்போது ஒரு தீவுக்கு உரிமையாளர் என்பதை நம்பமுடியவில்லை என்றும் தனது பெற்றோருடன் அந்தத் தீவில் வசிக்க விரும்புவதாகவும் லோப்பஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!