வீட்டுக்கு அருகே அனுமதியின்றி இரு சக்கர வாகனத்தை நிறுத்தியதால் தீ வைத்து கொளுத்திய நபர்!

புதுச்சேரியில், தனது வீட்டுக்கு அருகே எதிர்வீட்டுக்காரர் அனுமதியின்றி இருசக்கர வாகனத்தை நிறுத்தியதால் வாகனத்தை தீ வைத்து கொளுத்தியவர் கைதுசெய்யப்பட்டார். லாஸ்பேட்டை கொட்டுபாளையத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர், தனது வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்த இடமில்லாததால் எதிர் வீட்டின் அருகே நிறுத்திவந்ததால் எதிர் வீட்டில் உள்ள சக்திவேல் என்பவருக்கும் இவருக்கும் அடிக்கடி தகராறு இருந்துவந்துள்ளது.

இதனிடையே நாராயணன் மீண்டும் அதேபோல வாகனத்தை எதிர்வீட்டின் அருகே நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், இரவு நேரத்தில் வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகின. இதையடுத்து நாராயணன் அளித்த புகாரின் பேரில் சக்திவேலை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!