அணை உடைந்து சுரங்கத்துக்குள் புகுந்தது நீர் – 270 பேரின் நிலை தெரியாது பதறும் உறவுகள்!!!

சுரங்கத்தில் இருந்து வெளியேறும் நீரை சேமித்து வைத்த அணை உடைந்ததில் 270 ஊழியர்களின் நிலை என்னவென்று தெரியாத நிலையில் அச்சத்தில் உறைந்துள்ளனர் உறவினர்கள்.

ரஷ்யாவில் உள்ள சைபீரிய பிராந்தியத்திற்கு அருகே இருக்கும் கிராஸ்நோயார்ஸ்க் எனும் பகுதியில் தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் இருந்து வெளியேறும் நீரை தனியாக ஒரு அணை அமைத்து சேமித்து வைத்திருந்துள்ளனர்.

இந்நிலையில், இரவு எதிர்பாராத விதமாக நள்ளிரவு 2 மணிக்கு அந்த நீர்தேக்க அணை உடைந்து சுரங்கத்திற்குள் நீர் புகுந்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே 12 பேர் மரணமடைந்தனர்.

மேலும் அன்று இரவு வேலை செய்து வந்த 270 பேரில் நிலை என்னவென தெரியவில்லை. மீட்பு பணியினர் சுரங்கத்தில் சிக்கியுள்ள ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் உயிருடன் உள்ளார்களா? இல்லையா என்பது தெரியவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!