லண்டன் அருகே லாரியில் இருந்து 39 மனித உடல்கள் கண்டெடுப்பு!

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் கிழக்கு பகுதியில் கிரேஸ் என்ற இடம் உள்ளது. இங்குள்ள தொழில்பூங்கா அருகே நின்ற டிரக் ஒன்றை போலீசார் மடக்கி சோதனையிட்டனர். இதில், டிரக்கில் 39 மனித உடல்கள் இருந்தது போலீசாரை அதிர்ச்சி அடையச்செய்தது. டிரக்கை ஒட்டி வந்த அயர்லாந்தைச் சேர்ந்த 25-வயதான ஓட்டுநரை கைது செய்துள்ள பிரிட்டன் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை குற்றமாக அந்நாட்டு போலீசார் விசாரித்து வருவதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள எஸ்ஸெக்ஸ் போலீஸ் சூப்பிரண்ட் ஆண்ட்ரூ மரைனர், இச்சம்பவத்தில் என்ன நடைபெற்றது என்று விசாரணை நடத்தி வருவதாகவும், ஆம்புலன்ஸ் சேவையிடம் இருந்து எங்களுக்கு தகவல் கிடைக்கப்பெற்றதாகவும், இதனையடுத்து, டிரக்கை மடக்கி பிடித்ததாகவும் தெரிவித்தார். மேலும், பல்கேரியாவில் இருந்து அயர்லாந்து வழியாக பிரிட்டனுக்குள் டிரக், கடந்த சனிக்கிழமை நுழைந்திருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம் எனவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!