சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிறைமாத கர்ப்பிணி பெண்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையோரம் நிறைமாத கர்ப்பிணி பெண் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேடசந்தூர் வசந்த நகரை சேர்ந்தவர் சுஷ்மிதா. நிறைமாத கர்ப்பிணியான இவர், நேற்று கவுண்டச்சிப்பட்டியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை கவுண்டச்சிப்பட்டியில் சாலையோரம் கிடந்த சுஷ்மிதாவின் சடலம் மீட்கப்பட்டது. வயிற்றில் இருந்த சிசுவும் இறந்துவிட்டது.

அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தாலி சங்கிலி காணாமல் போன நிலையில், அவரது செல்போன் மற்றும் பை ஆகியவை சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்டன. சுஷ்மிதாவின் உடலில் எந்த காயங்களும் இல்லாததால், அவர் எப்படி உயிரிழந்தார் ? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!