5 மணி வரை நீடிக்கப்படும் வாக்களிப்பு நேரம்?

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு நேரத்தை மேலும் ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பது குறித்து சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசித்து வருகின்றது. இலங்கையில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வாக்களிப்பு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையே இடம்பெற்று வந்தது.

பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கையின் படி ஒரு மணித்தியாலத்தில் 130 இற்கு மேற்பட்டோர் வாக்களிக்க வேண்டும். இது சாத்தியமற்ற நிலை என்பதால் வாக்களிக்கும் நேரத்தை மேலும் நீடிப்பதற்கான விசேட வர்த்தமானியை வெளியிடுவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 35 ஆக இருப்பதால், 7 அங்குல நீளமான வாக்குச்சீட்டு அச்சிடப்பட்டு வருவதாகவும் இதனால், வாக்களிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!