சவேந்திர சில்வாவே இராணுவத் தளபதியாக தொடருவார் – சஜித் அறிவிப்பு

எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவைப் பாதுகாப்பேன், அவரே சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக தொடருவார் என்று, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நிவிற்றிகலவில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐ.நாவினால், போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால், சிறிலங்காவுடனான இராணுவ ஒத்துழைப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியிருந்தது.

இந்த நிலையிலேயே அவரை தான் பாதுகாப்பேன் என்று சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!