அனுரகுமாரவின் அரசாங்கத்தில் 30 அமைச்சர்கள் மாத்திரம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், 30 அமைச்சர்கள் மற்றும் 30 பிரதி அமைச்சர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவார்கள் என்று, அந்த அமைப்பின் அதிபர் வேட்பாளராக போட்டியிடும், ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க உறுதியளித்துள்ளார்.

நேற்று முன்தினம், அனுரகுமார திசநாயக்கவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

அவரது தேர்தல் அறிக்கையிலேயே, 30 அமைச்சர்கள் மற்றும் 30 பிரதி அமைச்சர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.

தமது அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்களோ, இராஜாங்க அமைச்சர்களோ நியமிக்கப்படமாட்டார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!