விஷ பாம்பு தீண்டியதும் பயத்தில் விரலை வெட்டி வீசிய விவசாயி…!

ஒரு சீன விவசாயி விஷ பாம்பு தீண்டியதும், பதற்றத்தில் உடனடியாக தன்னுடைய விரலை வெட்டி வீசியுள்ளார்.சீனாவில் ஷாங்க்யூ மாவட்டத்தின் ஜெஜியாங் மாகாணத்தை சேர்ந்த ஜாங் என்கிற 60 வயதான விவசாயி, மலைப்பகுதியில் விறகு வெட்டிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது உள்ளிருந்த ஒரு விஷ பாம்பு அவருடைய வலது கை ஆள்காட்டி விரலில் கடித்துள்ளது. இதனால் பதறிப்போன அவர், உடனடியாக அந்த விரலை வெட்டி வீசிவிட்டு 50 மைல்கள் தூரத்தில் உள்ள ஹாங்க்சோ மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

அங்கு சென்ற பின்னர் தான், விரலை மலைப்பகுதியிலேயே வீசிவிட்டு வந்தது நினைவுக்கு வந்துள்ளது. இதனால் சிகிச்சை முடிந்த பின்னர் அவருடைய விரலை மருத்துவர்களால் இணைக்க முடியாமல் போனது.அதேசமயம் அவரது விரைவான சிந்தனையைப் புகழ்வதற்குப் பதிலாக, இதுபோன்ற வியத்தகு எதிர்வினை தேவையற்றது என்றும், அந்த பாம்பு நினைப்பதை விட குறைவான விஷம் கொண்டது என மருத்துவர்கள் ஜாங்கை திட்டியுள்ளனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!