திருமண நிகழ்வில் மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் மோதல்… இதெல்லாம் ஒரு காரணமா????

டிஜே குத்துப்பாட்டு இசைக்க தவறியதால் திருமண நிகழ்வில் மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தெலுங்கானாவில் இடம்பெற்றுள்ளது.

தெலுங்கானா மாநிலம் சூரியா பேட்டையில் வியாழக்கிழமை மாலை திருமணம் விழாவிற்கு முன்பாக மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடைபெற்றது.

மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்திற்கு தேவையான ஏற்பாடுகளை பெண் வீட்டார் செய்திருந்த நிலையில், ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட டி.ஜே என்று அழைக்கப்படும் திரைப்படபாடல்களை தொகுத்து வழங்குபவர் குத்துபாடல்களை சரியாக வழங்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த பகுதியில் நடக்கின்ற திருமண விழாக்களில் ஆண்களும் பெண்களும் எந்த ஒரு பேதமும் இன்றி மது அருந்துவது வழக்கம் எனக் கூறப்படுகிறது. அந்தவகையில் மது அருந்திய மாப்பிள்ளை வீட்டார் இசைக்கு தக்கபடி ஆட்டம் போட்ட நிலையில் , பாட்டு சரியில்லை என்று பெண் வீட்டார் மீது குற்றம் சாட்டி வம்பிழுத்ததால் மோதல் உருவானது.

ஊர்வலம் முடிந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண்களும் பெண்களும் போதையில் இரு பிரிவாக பிரிந்து சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இரு தரப்பை சார்ந்தவர்களும் நாற்காலிகள், சமையல் பாத்திரங்கள் என கையில் கிடைத்த பொருட்களால் ஒருவர் மீது ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டனர், போதையேறிய பெண்களும் தாக்குதலில் ஈடுபட்டனர்

குத்து பாட்டுக்காக குடிகாரர்கள் அடித்துக் கொண்ட இந்த சம்பவத்தால், திருமணத்திற்காக அலங்காரத்துடன் காத்திருந்த மணப்பெண் ஏமாற்றத்தோடு அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் பேசி பிரட்ச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!