சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க ரூ.500 வரி விதித்த கிராமம்!

கோவா முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மூதாதையரின் ஊரான பாராவில் (Parra), சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க 500 ரூபாய் வரியாக செலுத்தவேண்டும் என கிராம பஞ்சாயத்து நிர்வாகம் இட்டுள்ள உத்தரவு, விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. சுற்றிலும் தென்னை மரங்கள் சூழ இயற்கை அழகுடன் ரம்மியமாக காணப்படும் இப்பகுதியில் சினிமா படப்பிடிப்புகளும்கூட நடத்தப்படுவதுண்டு.

இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை இங்கு அதிகரித்ததை கண்ட பஞ்சாயத்து நிர்வாகம், புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க 500 ரூபாய் வரை வரியாக செலுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!