தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் எனக்கு மிக முக்கியம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கோட்டா.

கடந்த சில தினங்களாக வேற்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் அரசியல் தலைவர்கள் பொய்யான பல பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர், இது தொடர்பில் தாம் மிகவும் கவனமாக ஆராய்ந்து வருவதாகவும் என ஜனாதிபதி வேற்பாளர் கோட்டாப்பாய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் தனக்கு சிறுபான்மையினரின் வாக்கு எனக்கு தேவை இல்லை என பொய்யான பிரச்சாரங்களை பலர் செய்துவருகின்றனர், தாம் ஒருபோதும் அவ்வாறு சொல்லவில்லை எனவும் தம் கட்சியை சார்ந்த எவரும் கூட அவ்வாறு சொல்லவில்லை எனவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

கடைசி தேர்தலில் தாம் தோல்வியடைந்ததே தமிழ் மக்களின் வாக்குகளால் தான் இம்முறை அந்த தவறை நாங்கள் விட மாட்டோம் என கூறியதுடன், இந்த முறை தமிழ் இளைஞ்சர்களின் ஆதரவு தமக்கு அதிகரித்து செல்வதை வெளிப்படையாக நாம் கான கூடியதாக இருக்கின்றது எனவும் அதனால் நான் வெற்றியடைவது உறுதி எனவும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!