போலிச் செய்தி வெளியிட்ட 3 பத்திரிகைகள்- 1000 கோடி ரூபா கேட்கும் சுமந்திரன்!

தேர்தல் பிரசார மேடையில் தான் கூறிய கருத்தைத் திரிபுபடுத்தி போலிச் செய்தி வௌியிட்ட 3 பத்திரிகைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொய்யான அறிக்கைகளை வெளியிட்டதற்காக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் 3 வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அச்செய்திகள் இனவாதம், விரோதம் அல்லது வன்முறையை தூண்டுவதாக அமைந்திருக்கும் இன வெறுப்பின் பிரச்சாரம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த பத்திரிகைகள் தனது மறுப்பை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சுமந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

“சஜித்துக்கு வாக்களித்தால் மட்டுமே சிங்களவரை தேற்கடிக்க முடியும்” என்று மவ்பிம, சிலோன் ருடே, அருன ஆகிய பத்திரிகைகளே குறித்த போலிச் செய்தியை வெளியிட்டுள்ளன.

சஜித்துக்கு வாக்களித்தால் மட்டுமே சிங்களவரை தேற்கடிக்க முடியும்” என்று போலிச் செய்தி வெளியிட்ட மவ்பிம, சிலோன் ருடே, அருன பத்திரிகைகளிடம் எம்ஏ.சுமந்திரன் 1000 கோடி ரூபா இழப்பீடு கோரி சட்டத்தரணி ஊடாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!