வெள்ளைவான் கடத்தல் – ராஜிதவுக்கு எதிராக வழக்கு!

வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்புடைய ஒருவர் தலைமறைவாக இருப்பதற்கு உதவியளித்தார் என அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோட்டை நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணி ஜனஜித் டி சில்வாவினால் நேற்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்தார். இதில் கடத்தல்களுக்காக வெள்ளை வானை செலுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவரும், கடத்தலுக்கு உள்ளான ஒருவரும் கலந்து கொண்டிருந்தனர். இந்தநிலையிலேயே, கடத்தல்களுடன் தொடர்புடைய ஒருவர் தலைமறைவாக இருப்பதற்கு உதவியளித்ததாக, அமைச்சர் ராஜித மீது குற்றம் சுமத்தி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!