மடு மாதா தேவாலய சூழல் யாத்திரை வழிபாட்டு பிரதேசமாக அறிவிப்பு!

மன்னார் – மடு மாதா தேவாலய பிரதேசத்தை புனித யாத்திரை வழிபாட்டு பிரதேசமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். மடு மாதா தேவாலயத்திற்கு யாத்திரை செல்லும் கத்தோலிக்க பக்தர்களுக்கு சமய நலன்புரிகளை வழங்கும் நோக்கில் தேவாலயம் அமைந்துள்ள பிரதேசத்தை யாத்திரை வழிபாட்டு பிரதேசமாக அறிவிப்பதாக ஜனாதிபதி கடந்த 13ஆம் திகதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!