வடக்கில் இராணுவத்தின் வீதித் தடைகள் – மல்லுக்கட்டி அகற்றியது பொலிஸ்!

பலாலி தொடக்கம் பளை வரையான வீதியில் இராணுவத்தினரின் வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இராணுவத்தினரால் நேற்று இந்த வீதி தடைகள் போடப்பட்டிருந்தன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி இவ்வாறு இராணுவத்தினரால் வீதி தடைகள் அமைக்கப்படுவது சட்டவிரோதமானது என பொலிஸார் இராணுவத்தை தெளிவுபடுத்தியதையடுத்து, இராணுவத்தால் குறித்த வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!