வடக்குக் கல்வி அமைச்சர் க. பரமேஸ்வரனுக்கு அழைப்பு வந்துள்ளது என்று தெரிவித்து கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரனிடம் அழைப்பாணை ஒன்றைக் கையளித்தனர். அந்த அழைப்பாணையில் யார் அழைப்பது, என்ன காரணம் என்பன போன்ற விடயங்கள் இல்லை. வடக்கு கல்வி அமைச்சர் க.பரமேஸ்வரன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வடக்கு கல்வி அமைச்சர் அந்த அழைப்பாணை தொடர்பில் பதில் கூடவேண்டியதில்லை என்று அவர்களுக்கு உறுதியாகப் பதிலளித்தார்.
இது தொடர்பில் அமைச்சருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகத்துக்கு நேற்று பயங்கரவாத விசாரணைப் பிரிவின் உத்தியோகத்தர்கள் என்று கூறி இருவர் வந்தார்கள். அவர்கள் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.பரமேஸ்வரனை எதிர்வரும் மாதம் 5ஆம் திகதி கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு கொழும்பில் இருந்து அழைப்பு வந்துள்ளது என்று தெரிவித்து அதற்கான அழை்பாணையை என்னிடம் தந்தார்கள்.
எவரது ஒப்பமும் அற்ற வெறுமனே கைகளால் எழுதப்பட்டு யாரால் எழுதப்பட்டது அல்லது யாருக்கு எழுதப்பட்டதென்ற எந்தவொரு தகவலுமற்றதாக போட்டோபிரதி எடுக்கப்பட்ட ஆவணமொன்றை அவர்கள் கையளித்தனர். மொட்டைக் கடிதப் பாணியில் அமைந்திருந்த குறித்த கடிதத்தை நான் ஏற்க மறுத்தேன். எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் எனக்கு அவ்வாறு சமூகமளிக்க நேரமில்லை என்றும் தெரிவித்துள்ளேன்.-என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!