ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியை அடுத்து இலங்கை வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்று எழுதப்பட்டிருக்கிறது.
பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண வேண்டிய அவசியத்தில் நாடு இருந்த போது மக்கள் சிந்தித்து சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள் என்று கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களில் ஒருவரான தினேஷ் குணவர்தன கூறினார்.
பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,
தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போதும் கோத்தபாய சிறந்த மற்றும் வினைத்திறன் மிக்க பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையையும் மீறி அரசாங்கம் சுவரொட்டிகள், பதாதைகளை ஒட்டிய போதிலும், கோத்தபாய இவற்றைத் தவிர்க்குமாறு குறிப்பிட்டு சிறந்த அமைதியான பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
இதனாலே எமது வேட்பாளருக்கு எதிராக ஆளும் தரப்பினர் பொய் குற்றச்சாட்டுகள் மற்றும் வதந்திகளைப் பரப்பியபோதும் மக்கள் அவற்றைக் கருத்திற் கொள்ளாமல் அவரை ஆதரித்துள்ளனர். தேர்தல் வெற்றியின் பின்னர் அவர் பதவியேற்றதை அடுத்து அவர் கருத்துத் தெரிவித்த போது தமக்கு ஆதரவாக மற்றும் எதிராக வாக்களித்த அனைவரையும் தம்முடன் இணைந்து செயற்படுமாறு குறிப்பிட்டு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். ஒரு சிறந்த தலைவருக்குரிய விசேட தன்மையாகவே நாம் இதனைக் கருதுகின்றோம்.
டலஸ் அழகப்பெரும
இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கூறியதாவது :
தேர்தல் முறைகேடுகள் குறைவாக பதிவு செய்யப்பட்ட தேர்தலாக இந்த ஜனாதிபதித் தேர்தல் வரலாற்று சிறப்பு பெறும். தேர்தல் முறைகேடுகளை இதுவரையும் கட்டுப்படுத்தி வந்தது போல் இனிவரும் காலங்களிலும் அதனைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அனைவரும் செயற்பட வேண்டும்.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது சில அமைச்சர்களினால் இரு ஊடகங்களுக்கு பெரும் அச்சுறுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் ஊடகங்கள் அதற்கு கட்டுப்படாமல் செயற்பட்டமை தொடர்பில் ஊடகங்களை நாம் பெரிதும் பாராட்டுகின்றோம். ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக அதிக வாக்குகளால் எமது வேட்பாளரை வெற்றியடையச் செய்துள்ளனர்.
எதிரணியினர் எமது வேட்பாளரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுத்திருந்தனர். அதற்காக போலி ஆவணங்கள், காணொளி காட்சிகளையும் வெளியிட்டனர். இம்முறை தேர்தலின் போது கோத்தபாயவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அரசியல்வாதிகளை புறந்தள்ளிவிட்டு தொழிற்சங்கங்கள், கலைஞர்கள், பல்வேறு துறை சார்ந்தவர்கள் முன்வந்திருந்தனர்.
தேர்தல் முறைகேடுகள் குறைவான தேர்தலான இந்தத் தேர்தல் வரலாற்று சிறப்பு பெறும். இந்த அனைத்து வெற்றிகளுக்கும் காரணம் எமது வேட்பாளரின் சிறந்த வேலைத்திட்டமே ஆகும். நாம் வெற்றியை பகிர்ந்து கொள்வதுடன் இதற்கான முழு மதிப்பையும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு கொடுக்க வேண்டும்.
இலங்கை வரலாற்றில் மே 18ஆம் திகதி சிறப்பு பெறுவதைப் போல் சிறந்த தலைவர் ஒருவர் நாட்டை பொறுப்பேற்ற தினம் என்பதால் நவம்பர் 18ஆம் திகதியும் சிறப்பு பெறும்.
இவர் சுவரொட்டி கள் மற்றும் பதாதைகளை தவிர்த்தமையாலேயே பெருமளவான முறைகேடுகள் கட்டுப்படுத்தப்பட்டன. தேர்தலின் பின்னர் சிற்சில வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும் இதனை தவிர்த்துக் கொள்ளுமாறு எமது ஆதரவாளர்களிடம் கேட் டுக் கொள்கின்றோம்.
வெற்றியை எளிமையான முறையில், யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகை யில் கொண்டாடுவோம். ஏன் நாம் எப்போதும் போல் ஒருவருக்கு ஒருவர் எதிராக செயற்பட வேண்டும்? நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றி ணைந்து ஒரே நாடு, ஒரே சட்டம் என் னும் அடிப்படையில் செயற்படுவோம் என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!