பிக்குகள் கௌரவத்தை கேட்டு வாங்கக் கூடாது – நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர…?

பௌத்த பிக்குகள் கௌரவத்தை கேட்டு வாங்காது, சித்தார்த்த கௌதம புத்தரின் உண்மையான தொண்டர்களாக அந்த கௌரவத்தை சம்பாதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.கடந்த காலத்தில் பௌத்த பிக்குகளுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அத்துடன் அவர் பௌத்த பிக்குகளை காவிதாரிகள் என கூறியிருந்தார். இலங்கை பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு அல்ல எனவும் குறிப்பிட்டிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!