ஐ.தே.க. ஆத­ர­வா­ளர்கள் முகங்­கொ­டுத்­துள்ள வன்­மு­றைகள் தடுத்து நிறுத்­தப்­படும்: ஜனா­தி­பதி உறு­தி­ என்­கிறார் ரணில்

ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ரவா­ளர்கள் முகங்­கொ­டுத்­துள்ள வன்­மு­றைகள் தொடர்பில் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ ­விற் கு கூறி­யி­ருப்­ப­தா­கவும் அத்­த­கைய வன்­முறை சம்­ப­வங்கள் தடுக்­கப்­படும் என்று அவர் உறு­தி­ய­ளித்­தி­ருப்­ப­தா­கவும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருக்­கிறார்.

ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வ­டைந்­ததன் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­தேச மற்றும் நக­ர­சபை உறுப்­பி­னர்கள், ஆத­ர­வா­ளர்கள், சஜித் பிரே­ம­தா­ச­விற்கு பெரும்­பான்­மை­யாக வாக்­க­ளித்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கப்­படும் சம்­ப­வங்கள் சில பதி­வா­கி­யி­ருந்­தன. அதே­போன்று அவர்­க­ளுக்கு எதி­ராக சமூ­க­ வ­லைத்­த­ளங்­களில் வெறுப்­பு­ணர்வுப் பேச்­சுக்கள் பரப்­பப்­ப­டு­வ­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

இந்­நி­லை­யி­லேயே ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் எதிர்­கொள்ள நேர்ந்­துள்ள வன்­மு­றைகள் தொடர்பில் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ­வுடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருப்­ப­தாக அக்­கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவ­ரது டுவிட்டர் பக்­கத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை பதி­விட்­டி­ருக்­கிறார்.

அப்­ப­திவில் அவர் மேலும் குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­வது:

ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் முகங்­கொ­டுக்க வேண்­டி­யேற்­பட்­டுள்ள வன்­மு­றைகள் தொடர்பில் ஜனா­தி­ப­தி­யுடன் கலந்­து­ரை­யா­டினேன். அத்­த­கைய வன்­மு­றைகள் தடுக்கப்படும் என்று அவர் என்னிடம் உறுதியளித்திருக்கின்றார். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதை தேர்தல் காலத்தில் மாத்திரமன்றி, அதன் பின்னரும் உறுதி செய்வது மிகவும் அவசியமானதாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!