தமிழ் பெயர் பலகைகள் அழிப்பு – விசாரணைக்கு உத்தரவு!

ஆட்சிமாற்றத்தை அடுத்து பாணந்துறை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் உள்ள சில தமிழ் பெயர் பலகைகள் விசமிகளால் அழிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு அதனுடன் தொடர்புடைய நபர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் குறித்த தமிழ் பெயர்பலகைகளை சீர் செய்யுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து பாணந்துறை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் உள்ள சில தமிழ் பெயர் பலகைகள் அடையாளம் தெரியாத விசமிகளால் அழிக்கப்பட்டுள்ளது.

நடை­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் பிர­தான இரு வேட்பாளர்­களும் பெற்­றுக்­கொண்ட வாக்­கு­களை பிர­தே­ச­வா­ரி­யாக நோக்கும் போது சிறு­பான்­மை­யின தமிழ், முஸ்லிம் மக்­களில் பெரு­மள­வானோர் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரேம­தாச­விற்கே வாக்­க­ளித்­தி­ருந்­தனர்.

அத­னை­ய­டுத்து சில பிர­தே­சங்­க­ளிலும், குறிப்­பாக சமூ­க­வ­லைத்­த­ளங்­க­ளிலும் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­களை அச்­சு­றுத்தும் வகை­யி­லான சம்பவங்­களும் பதி­வா­கி­யி­ருந்­தன.

அவற்றின் தொடர்ச்­சி­யாக பிரதேசமொன்றில் பாணந்துரை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் தமிழ், சிங்­கள மற்றும் ஆங்­கிலப் பெயர்ப்­ப­ல­கை­களில் தமிழ் பெயர்ப்­ப­லகை மாத்­திரம் அகற்­றப்­பட்­டி­ருக்­கிறது.

இந் நிலையில் தமிழ் பெயர்ப்­ப­லகை அகற்­றப்­பட்­டி­ருக்கும் புகைப்­ப­டங்­களை தனது டுவிட்டர் பக்­கத்தில் மங்­கள சம­ர­வீர பதி­வேற்றம் செய்­தி­ருக்­கின்றார்.

அத்­தோடு, ‘தேர்தல் முடி­வ­டைந்து ஒரு­வாரம் கடந்­தி­ருக்கும் நிலையில் மீண்டும் பெரும்­பான்­மை ­வா­தத்தின் அழுக்­கான முகம் வெளிப்­பட ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. தமிழில் காணப்­பட்ட வீதி­களின் பெயர்கள் அகற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஜனா­தி­பதி அவர்­களே, இது­கு­றித்த உங்­க­ளு­டைய பிர­தி­ப­லிப்­பிற்­காக நாடு காத்­துக் ­கொண்­டி­ருக்­கி­றது என்றும் பதி­விட்டிருந்தார்.

இந்நிலையிலேயே பிரதமர் மீண்டும் தமிழ் பெயர்பலகைகளை சீர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!