எம்சிசி உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டோம் – விமல் வீரவன்ச

சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவுடன் எம்சிசி உடன்பாட்டில் கையெழுத்திடாது என்று, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசின் புதிய அமைச்சராக நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

“அமெரிக்காவுடன் எம்.சி.சி உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு எமது அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை, இந்த பிரச்சினையில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!