டக்ளஸ், அங்கஜனுக்கு நான் சமமானவன் அல்ல! – என்கிறார் பெருமாள்!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கு நான் சமமானவன் இல்லை என்று வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவருமான வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடடில் புதிய அரசாங்கத்தில் தங்களுக்கு பதவி ஒன்றும் வழங்கப்படவில்லையே என கேட்கப்பட்ட கேள்விக்கு பதலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் இந்த அரசில் நீண்டகால பங்காளர்கள். நாம் தற்போதுதான் எமது ஆதரவை தெரிவித்திருக்கிறோம். ஆட்சிமாற்றம் ஏற்படவேண்டும் எனவும் தமிழ் மக்களின் பங்கும் அதில் இருக்கவேண்டுமென்ற பிரசாரத்தில் ஈடுபட்டோமே தவிர பதவிக்காக பணியாற்றவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!