கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளுடன் சுமந்திரன் ஆலோசனை!

கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் உள்ள சனசமூக நிலையத்தில் விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நேற்று சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன், ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான நிலைப்பாடுகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருவதாகவும் அவ்வாறான ஒரு சந்திப்பே இது என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!