நிறைவேற்றதிகாரத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் இடையில் சமநிலையொன்றை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நீக்கவேண்டும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதுகுறித்து எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுட்டிக்காட்டும்பட்சத்தில் நாம் அவதானம் செலுத்தத் தயாராக இருக்கின்றோம்.
ஆனால் அதனை முழுமையாக நீக்குவதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!