ஜனவரி 3 வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார் ஜனாதிபதி!

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வு நிறைவு செய்யப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டுள்ளதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமாகும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!